Breaking

Thursday, 9 July 2020

State Bank of India - பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.



இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு எம்.சி.எல்.ஆர் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்ததின் விளைவாகத் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளது. இன்று இவ்வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்கள் 0.05 முதல் 0.10 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்களின்படி, 3 மாத காலத்துக்கான எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 6.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 6.70 சதவீதமாக இருந்தது. அதேநேரம் 6 மாதம், 1 வருடம், 2 வருடம், மற்றும் 3 வருட எம்.சி.எல்.ஆர். வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. எஸ்பிஐ தனது சொந்த ஏடிஎம்களை மட்டுமல்லாமல் பிற வங்கி ஏடிஎம்களையும் வரம்பற்ற முறையில் பயன்படுத்த அனுமதித்துள்ளது.

இனிமேல் எஸ்பிஐ ஏடிஎம் அல்லது வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு பணம் எடுக்க எந்தவித கூடுதல் கட்டணமும் கிடையாது. எனினும் எஸ்பிஐ அட்டையை பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறை குறுகிய நாட்களுக்கு மட்டுமே அனுமதி.

நகரங்களில் (Tier-1 cities) உள்ள வாடிக்கையாளர்கள் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர். அதே போல் பிற நகர்ப்புற மற்றும் கிராமப்புற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கும் வரம்பு 5 முறை மட்டுமே. எஸ்பிஐ ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பை தள்ளுபடி செய்துவிட்டது.

எஸ்பிஐ யின் IMPS (Immediate Payment Service) கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாக அறிவித்துள்ளது. இணைய வழி வங்கி சேவை மற்றும் கைபேசி வங்கி ஆப் (Mobile Banking App) மூலமாக நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு IMPS கட்டணம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. IMPS மூலம் ரூபாய் 50,000/- வரை பணத்தை எந்தவித கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்யலாம். இந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலும், வங்கி நிர்வகிக்கும் நாட்களை பொருத்தது.

No comments:

Post a Comment