Breaking

Wednesday, 8 July 2020

Nagercoil News - நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை


நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரசாந்த் மு வடநேரே அவர்களின் உத்தரவின்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் அவர்களின் வழிகாட்டுதலின் படி அனைத்து வீடுகளிலும் சளி ,இருமல் ,காய்ச்சல் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வந்தது .


தெர்மோ ஸ்கேனர் :
இந்நிலையில் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதார பணியாளர்கள் தெர்மோ ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




No comments:

Post a Comment