Breaking

Wednesday, 15 July 2020

Kanniyakumari News - களியக்காவிளை மீன் மார்க்கெட் ஒரு வாரகாலம் மூட மீன் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் முடிவு




களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் களியக்காவிளை மீன் மார்க்கெட் ஒரு வாரகாலம் மூட மீன் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். களியக்காவிளையில் மீன் மார்க்கெட்  தினமும் செயல்படுவதினால் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்  மீன் மார்க்கெட்டை மூட வலியுறுத்தப்பட்டது.

களியக்காவிளை மீன் கமிஷன் வியாபாரிகள் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை
கூட்டத்தில் தொடர்ந்து எட்டு நாட்கள் மீன் மார்க்கெட் செயல்படாது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டத்தை  மீன் மார்க்கெட்டை மூடப்பட்டது   இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் அந்தரியாஸ். பிராங்கிளின், மாகீன் அபுபக்கர், முஜுது ஆண்டப்பன், பாப் பச்சன், ஜோன், விக்டர், முகமது அலி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment