
தூத்தூர்:
தூத்தூர் மீனவ கிராமத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 16 போலீசாருக்கு தூத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் நேற்று 44 வயது போலீஸ்காரர், 28 வயது சிறப்பு படை போலீஸ்காரர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் பணியாற்றிய நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தூத்தூர் கிராமத்தில் இதுவரை 101 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று வரை 80 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment